Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலைலயே சொல்லிட்டோம்... நீட் குறித்து எடப்பாடியார்!!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (13:34 IST)
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் மத்திய அரசு நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கூடாது என மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்த நீட் விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை நீட் தேர்வு நம் கையை விட்டு போய்விட்டது என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
அவர் பேசியதாவது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியாகிவிட்டது. ஆனால் தற்போது நீட் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலுயுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments