Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முழு ஊரடங்கு என்பதெல்லாம் வதந்திதான்! – எடப்பாடியார் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (12:00 IST)
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மேட்டூர் அணையிலிருந்து வேளாண் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மதகை திறந்து தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகு பேசிய அவர் “மக்கள் கொரோனா தொற்றின் வீரியத்தை புரிந்து கொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தேவையில்லாமல் வெளியே சுற்றாமல் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மீண்டும் பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்படலாம் என்று செய்திகள் உலா வருவது குறித்து பேசிய அவர் “தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வாறாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறியுள்ளார். முழு ஊரடங்கு குறித்தி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments