ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (11:26 IST)
ஈரோடு கிழக்கில் நடந்ததுதான் விக்கிரபாண்டி இடைத்தேர்தலில் நடக்கும் என்றும் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால் தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். 
 
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் மற்றும் பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. 
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் தான் அதிமுக போட்டியிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 
 
Edited bt Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments