Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (17:34 IST)
அமைச்சா் அமித்ஷா ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போது நான் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்தபோது அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார் என்பதும், அதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காத நிலையில் இது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார் 
 
மேலும் பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி என்றும் அதிமுக தமிழ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு திட்டவட்டமாக பதில் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments