Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிட்டியில் தீராத தண்ணீர் பிரச்சனை: பேட்டியை தவிர்க்கும் எடப்பாடியார்!

Advertiesment
தண்ணீர்
, செவ்வாய், 18 ஜூன் 2019 (13:15 IST)
தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளிப்பதாக தெரிவித்து பின்னர் அதனை ரத்து செய்துள்ளார். 
 
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 12 மணிக்கு தண்ணீர் பிரச்னை குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து முதல்வர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிப்பார் என்றும் கூறப்பட்டது.
 
ஆனால், கூட்டம் முடிந்தவுடன் பேட்டி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எதற்காக பேட்டியை ரத்து செய்தார் என கேட்டபோது அமைச்சர் வேலுமணி ஏற்கனவே அனைத்தையும் பேசிவிட்ட நிலையில் அதனையே மீண்டும் முதல்வர் சொல்ல வேண்டாம் என பேட்டி ரத்து செய்யப்பட்டது என முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவ்ல் வந்ததாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயமான ராகுல் காந்தி – காங்கிரஸிடம் எந்த பதிலும் இல்லை !