Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்டு 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! – எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு!

ஆகஸ்டு 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! – எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு!
, வியாழன், 30 ஜூலை 2020 (12:59 IST)
மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி கொண்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் இது ஜூலை 31உடன் முடிவடைகிறது. இந்நிலையில் மத்திய அரசு தளர்வுகள் 3.0 அறிவித்துள்ளதோடு மாநிலங்களுக்கு பயணிக்க இபாஸ் அவசியம் இல்லை என கூறியிருந்தது. இந்நிலையில் முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, தமிழகத்தில் ஆகஸ்டு 31 வரை பொதுமுடக்கம் தொடரும்.

மாவட்டங்களுக்கு வெளியே பயணிப்பதற்கு எப்போதும்போல இ-பாஸ் அவசியம்.

கடைகள், தேநீர் கடைகள் மற்றும் அங்காடிகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், திரையரங்குகள், விளையாட்டு திடல்கள் திறப்பதற்கான தடை தொடரும்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவருந்த அனுமதி

மாஸ்க் அணிவது, கடைகளில் சானிட்டைசர் உபயோகிப்பது ஆகிய செயல்பாடுகளும் தொடரும்.
webdunia

வார இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அமலில் இருக்கும்.

அனைத்து தொழில்நிறுவனங்களும் 75 சதவீதம் பணியாளர்களோடு பணியை தொடரலாம்.

ஆன்லைன் தளங்களில் அத்தியாவசிய மற்றும் அதியாவசியமற்ற பொருட்களை அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி

கிராமப்புரங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கு வருமானம் ஈட்டும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் செயல்பட அனுமதி

பெரிய கோவில்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்க தடை தொடர்கிறது.

மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள், அரசு பேருந்துகள் ஆகஸ்டு 31 வரை இயங்காது.

மத்திய அரசு 6 கட்டங்களுடன் ஊரடங்கை முடித்த நிலையில் தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறையும் தன்மையை பொறுத்து மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனித்துறை அமைக்கலாமே? – உயர்நீதிமன்றம் கேள்வி!