Publish Date: Thu, 30 Jul 2020 (12:28 IST)
Updated Date: Thu, 30 Jul 2020 (12:29 IST)
நடிகர் சரத்குமாருக்கு அவரது எண்ணிலிருந்தே ஒருவர் அழைத்து பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் சரத்குமார் எண்ணையே காட்டியுள்ளது. அதை எடுத்து பேசியபோது கோயம்புத்தூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினீயர் என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
எவ்வாறு தனது நம்பரிலிருந்தே போன் செய்கிறீர்கள் என சரத்குமார் கேட்க, அதற்கு அந்த நபர் ஒரு சாஃப்ட்வேர் மூலமாக அவ்வாறு செய்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தபட்ட நபரின் செல்போன் எண் சரத்குமார் போனில் பதிவாகவில்லை என்றும், அதற்கு பதிலாக சரத்குமார் எண்ணே பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.