Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம்! – எடப்பாடியார் கோரிக்கை!

Webdunia
புதன், 19 மே 2021 (13:21 IST)
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்டு, அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில், டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள், தினக்கூலிகள் ஆகியோரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த ஊரடங்கில் உதவும் விதமாக ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments