Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கம்முனு இரு...' செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரம் அடைந்த ஈபிஎஸ்!

eps
, புதன், 19 அக்டோபர் 2022 (12:20 IST)
கம்முனு இரு...' செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரம் அடைந்த ஈபிஎஸ்!
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களை கம்முனு இரு என ஆத்திரத்துடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமார் வழங்கவேண்டுமென அதிமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் என்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டிருந்தனர் ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை
 
இதனை அடுத்து தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியபோது செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது செய்தியாளர்கள் பேசிக் கொண்டே இருந்ததால் கம்முனு இரு என ஆத்திரத்துடன் எடப்பாடி பழனிச்சாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்க கடலில் உருவாகிறது ‘சிட்ரங் புயல்’; தமிழகத்திற்கு ஆபத்தா?