Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத்தேர்தலில் காசு கொடுக்கப் பார்க்கிறது திமுக – முதல்வர் குற்றச்சாட்டு !

இடைத்தேர்தலில் காசு கொடுக்கப் பார்க்கிறது திமுக – முதல்வர் குற்றச்சாட்டு !
, செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:52 IST)
வேலூர் மக்களவைத் தேர்தலைப் போன்று இடைத்தேர்தலிலும் பணம் கொடுத்து வெற்றிப்பெற திமுக முய்லவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்கு  சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மரியாதை நிமித்தமாக தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்துப் பேசினேன். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகியத் தொகுதிகளில் திமுக பணம் கொடுத்து வெற்றிப் பெற முயலும். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பணம் கொடுக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதை போல இடைத்தேர்தலிம் முயலும். எனவே மக்கள் செல்வாக்குடன் அதிமுக வெற்றி பெறும்.’ எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தம்! நன்றி சொன்ன மக்கள்!