Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமலாக்கத்துறை சோதனையில் ரூ.15 கோடி பறிமுதல்.. மணல் குவாரிகளில் நடந்த சோதனை நிறைவு..!

Advertiesment
மணல் குவாரி
, வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:19 IST)
மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் 4 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.15 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 நாட்களாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நிறைவு பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கனிமவளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவாரூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு, உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் கோரிக்கை..!