Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி..! குற்றாலத்தில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும்.!

Kutralam

Senthil Velan

, புதன், 29 மே 2024 (17:19 IST)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, அதிக ஒலி எழுப்பக்கூடிய அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள்  நடைபெற்று வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பழைய குற்றாலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவும், மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில், குற்றாலம் மெயின் அருவியில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணி  நடைபெற்று வருகிறது. மெயின் அருவியில் அருவிக்கரை பகுதியில் ஏற்கனவே அபாய சைரன் பொருத்தப்பட்டுள்ளது.

 
கூடுதலாக பெண்கள் உடை மாற்றும் பகுதி, வழிப்பாதை உள்ளிட்ட இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிக ஒலி எழுப்பும் எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலெக்‌ஷன் ரிசல்ட் அன்னைக்கு என்னை யாரும் பார்க்க முடியாது! – பிரதமர் மோடி எடுத்த திடீர் முடிவு!