Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (20:06 IST)
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு சமிபத்தில் நடந்த 38 தொகுதி மக்களவை மற்றும் 18 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. இந்த சின்னத்தை டிடிவி தினகரன் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கும் பரிசுப்பெட்டி சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்.
 
இந்த நிலையில் சற்றுமுன் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் அமமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த தேர்தல் அமமுகவுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலை உள்ளதால் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments