Publish Date: Mon, 22 Apr 2019 (17:45 IST)
Updated Date: Mon, 22 Apr 2019 (17:51 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதி முடிகிறது.
இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது, 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக தலைமை தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு 17 மற்றும் 11 அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமென அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அரவக்குறிச்சிக்கு 14 அதிமுக மாவட்டப்பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சூலூர் தொகுதிக்கு அதிமுகவின் 13 மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் தலைமை தெரிவித்துள்ளது.
4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம் செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கூர்ந்து கவனிக்கத்துவருவதாகவும் தகவல் வெளியாகிறது.