Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்!

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (20:33 IST)
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்தது
 
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருமாவளவனுக்கு சின்னம் ஒதுக்கக்கூறி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சற்றுமுன் அவருக்கு 'பானை' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எனவே திருமாவவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
 
மேலும் தமிழகம் தவிர விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது இந்த தொகுதிகளிலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments