Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை.. சென்னையில் இருவர் கைது..!

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:58 IST)
சென்னையில் இ-சிகரெட்  பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசால் இ-சிகரெட்  தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட்  விற்பனை குறித்து போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.

இந்நிலையில் ஆர்கே நகர் நெடுஞ்சாலையில் முகமது ஜப்ருல்லா என்பவர் இ-சிகரெட் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து அவரும் அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 476 இ-சிகரெட்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இ-சிகரெட் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments