Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்ஜ் போட்டிருந்த போது இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது.. லட்சக்கணக்கில் சேதம்..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (12:00 IST)
திருக்கோவிலூரில் இ-பைக் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இபைக் உரிமையாளர்ஒரு அறையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சார்ஜ் போட்டதாகவும், சார்ஜ் போட்டிருந்த போது இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி இ-பைக் எரிந்ததால் பைக் உரிமையாளர் உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் இந்த தீ விபத்தில் மற்றொரு இருசக்கர வாகனம், பிரிட்ஜ் என ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
இதனையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments