Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரைமுருகனுக்கு என்ன தில்லு... என்ன வார்த்த சொல்லிபுட்டாரு..!!

Advertiesment
துரைமுருகனுக்கு என்ன தில்லு... என்ன வார்த்த சொல்லிபுட்டாரு..!!
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:43 IST)
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக கூட்டத்தொடரை புறக்கணித்தது குறித்து துரைமுருகன் பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக கூட்டத்தொடரை புறக்கணித்து வெளியேறியது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்த போது, தமிழக நிர்வாகத்தையும் நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக்கிய ஆட்சி, இந்த அ.தி.மு.க. ஆட்சி. ஆகவே இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையை கண்டித்து வெளிநடப்புச் செய்திருக்கிறோம்.

டென்டர் விட்டு பினாமிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் பழனிசாமிக்குத் தெரிந்த நிதி நிர்வாகம். தமிழக தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 லட்சத்தை கடந்த அமெரிக்க கொரோனா பலிகள்! – அதிபர் ஜோ பிடன் வருத்தம்!