Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் உடல் சீராக உள்ளது - மருத்துமனை தரப்பு அறிக்கை!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:36 IST)
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மேலும் துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே நேரத்தில் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சற்றுமுன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்  உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments