Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரே தமிழில் பெயர் வைப்பதில்லை – துரைமுருகன் ஆதங்கம் !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:14 IST)
திமுக வின் பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திமுகவினரே இப்போது தமிழில் பெயர் வைப்பதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய துரைமுருகன் ’இந்தியைக் கற்றுகொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தாய் மொழியான தமிழின் அதிகப்பற்று வேண்டும். இப்போது யாரும் தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்லை. இதில் திமுகவினரும் அடக்கம். திமுக காரர் ஒருவரிடம் பேத்தியின் பெயரைக் கேட்டேன். அவர் அனிஜா என்கிறார். இன்னொருவர் அஸ்வின் என்கிறார். இப்படி திமுகவினரே தமிழில் பெயர் சூட்டாத சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments