Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளே வந்தாலும் காங்கிரஸ் அஞ்சாது! – கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (14:11 IST)
நாங்குநேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் – திமுக இடையே சலசலப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார்தான் பதவி வகித்து வந்தார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதில் வெற்றிபெற்று அவர் எம்.பி ஆகிவிட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி இடைதேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று அதன் கட்சி பிரமுகர்கள் முதல் தொண்டர்கள் வரை விரும்புகிறார்கள்.

இதுகுறித்து முன்னரே பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாங்குநேரியில் காங்கிரஸும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடலாம் என பரிந்துரைக்க இருப்பதாக கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து திமுகவோடு கலந்து பேசிய பின் முடிவு அறிவிக்கப்பட்டும் என கூறினார். ஸ்டாலினோ முதலில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்று கூறி நழுவி விட்டார்.

இந்நிலையில் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் வேட்பாலர் ஒருவர் பெயரை சொல்லி, அவர்தான் நிற்பார் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என போஸ்டர் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விஷயம் திமுக காதுக்கு போக, அவர்கள் கே.எஸ்.அழகிரியை அழைத்து பேசியதாகவும், இதனால் அழகிரி சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை மறுத்த கே.எஸ்.அழகிரி “காங்கிரஸ் யாருக்கும் பயந்து நோட்டீஸ் அனுப்பவில்லை. கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, அந்த கடவுளே அழுத்தம் கொடுத்தாலும்  காங்கிரஸ் அஞ்சாது” என்று பேசியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி இப்படி பேசியிருப்பது காங்கிரஸுக்கும், திமுகவுக்கு இடையே ஏதோ சச்சரவு ஏற்பட்டிருப்பதால்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments