Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்

Advertiesment
மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்
, புதன், 20 அக்டோபர் 2021 (18:04 IST)
மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்
மதிமுகவின் பொதுச் செயலாளராக தற்போது வைகோ இருந்து வரும் நிலையில் அடுத்த பொதுச் செயலாளர் குறித்த மறைமுக ரகசிய வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ரகசிய வாக்கெடுப்பில் துரை வையாபுரிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் இதனை அடுத்து அவர் கட்சியின் தலைமை கழக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் இதில் 104 பேர்கள் துரை வையாபுரிக்கு ஆதரவு அளித்துள்ளதை அடுத்து அவர் அடுத்த கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போனை விழுங்கிய இளைஞர்.. ஸ்கேனை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்!