Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிப் பொறுப்புக்கு வந்தது ஏன்? துரை வைகோ பேட்டி

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (16:01 IST)
மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன் என துரை வைகோ பேட்டியளித்துள்ளார். 

 
மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடந்த நிலையில் பெரும்பாலானோர் வாக்குகளை பெற்று துரை வையாபுரி புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கட்சியிலுள்ள பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வாரிசு அரசியலை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த வைகோ தனது வாரிசை கட்சிக்கு கொண்டு வந்து உள்ளதை ஜீரணிக்க முடியாது என்று ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் இது குறித்து துரை வைகோ பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன். மதிமுக தொண்டர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், அவர்கள் அழைப்பை நிராகரிக்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments