Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:34 IST)
ரஜினிகாந்த் தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என் கூறிய நிலையில் திமுக பொருளாளர் துரை முருகன் பதிலடி தந்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல், எனக்கும் காவி சாயம் பூசி வருகின்றனர், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை என கூறினார்.

மேலும் இதை தொடர்ந்து, தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் நிலவுகிறது எனவும் கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலடி தருவது போல் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழகத்தில் இருக்கு வெற்றிடத்தை முக ஸ்டாலின் நிரப்பியுள்ளார் என கூறியுள்ளார்.

கட்சி தொடங்குவதாக அறிவித்த நாளிலிருந்து கொள்கைகள் குறித்து எதுவும் பேசாமல் இருந்த ரஜினி, தற்போது பாஜகவிற்கு எனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கூறியதை எதிர்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என வழக்கம் போல் ரஜினி கூறியுள்ளது தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவினர் மற்றும் திமுகவினரிடையே சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments