எங்கள் விட்டிற்கு வந்தது யாரென்றே தெரியவில்லை: அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

Siva
வெள்ளி, 3 ஜனவரி 2025 (14:05 IST)
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை," என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமலாக்கத்துறை சோதனை குறித்து சென்னையில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன், அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். 
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, "எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்று எனக்கு தெரியாது. வீட்டில் யாரும் இல்லை, வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் உள்ளனர். இதனால் எனக்கு சரியாக விவரம் சொல்ல தெரியவில்லை. அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சோதனை தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியுமோ, அதே அளவு தான் எனக்கும் தெரியும்," என்று கூறியுள்ளார்.
 
அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்.. 60 சதவிகிதத்தை தாண்டிய வாக்கு சதவீதம்.. இன்னும் சில நிமிடங்களில் கருத்துக்கணிப்பு..!

அஜித் வீடு, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோலிவுட்டில் பரபரப்பு!

சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக 3 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

SIR திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் தவெக!.. விஜய் கலந்து கொள்வாரா?!...

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை: டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments