இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

Siva
வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:30 IST)
சென்னை கொடுங்கையூர் பகுதியில் இளைஞர்களை இலக்காக வைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கொடுங்கையூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
 
கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த அரவிந்த் என்கிற டோலு என்பவரது வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 420 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரவிந்த் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதும், சமூக ஊடகங்கள் மூலம் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
 
அரவிந்த் அளித்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகளான சஞ்சய் , அஜித்குமார்  , ரஞ்சித், பிரவீன் , மற்றும் பைசன் அகமது ஆகிய மேலும் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட இந்த ஆறு பேரிடமிருந்தும் மொத்தம் 1,166 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளம் மூலம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments