Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்.. சென்னையில் இன்று 2ஆம் கட்ட சோதனை..!

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (09:03 IST)
சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பூந்தமல்லி முதல் போரூர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என்றும், இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
 
தற்போது ’கலங்கரை விளக்கம்’ முதல் ’பூந்தமல்லி’ வரை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பொறியியல் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்றைய இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தபின், அடுத்த கட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை: 2 குழந்தைகளுடன் பெண் தவிப்பு..!

தீர்ப்பு கூட எழுத தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அடுத்த கட்டுரையில்
Show comments