Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்.. சென்னையில் இன்று 2ஆம் கட்ட சோதனை..!

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (09:03 IST)
சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பூந்தமல்லி முதல் போரூர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என்றும், இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
 
தற்போது ’கலங்கரை விளக்கம்’ முதல் ’பூந்தமல்லி’ வரை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பொறியியல் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்றைய இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தபின், அடுத்த கட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 10 மாவட்டங்களை வெளுக்கப் போகும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

பல்லாவரம் பாலத்தில் கல்லூரி பேருந்து விபத்து.. 10 விமானனங்கள் தாமதம்..!

பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

பீகாருக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்! தேர்தலையொட்டி வாரி வழங்கிய மோடி!

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments