Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 ஏக்கர் நிலத்தை திமுகவுக்கே கொடுக்க தயார்: டாக்டர் ராம்தாஸ் அறிவிப்பு

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (08:43 IST)
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்
 
இந்த விசாரணைக்கு பின்னர் திமுகவின் ஆர்எஸ் பாரதி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ’முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டதாகவும் இந்த பிரச்சனையை எழுப்பிய டாக்டர் ராமதாஸ் அவர்களின் ஆயிரம் ஏக்கர் நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பது குறித்து விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார் 
 
இதனையடுத்து ஆர்.எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு டாக்டர் ராமதாஸ் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை!
 
முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்’ என்று கூறியுள்ளார். டாக்டர் ராமதாஸின் இந்த சவாலுக்கு திமுகவின் ரியாக்சன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments