Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் நெஞ்சில் குடியிருக்கும் மாவீரன்: காடுவெட்டி குரு நினைவு நாள் குறித்து ராமதாஸ்!

kaduvetti
, புதன், 25 மே 2022 (15:31 IST)
பாமக பிரமுகர் காடுவெட்டி குரு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் டாக்டர் ராமதாஸ் என் நெஞ்சில் குடியிருக்கும் காடுவெட்டி குரு என குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
என் நெஞ்சில் குடியிருக்கும், என் அன்புக்குரிய மாவீரனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள், அதிரடி நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வருகின்றன. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும் நாம் நெஞ்சில் நிறுத்துவோம்!
 
காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம்!
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதையன் இறப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்