Publish Date: Tue, 08 Jun 2021 (22:11 IST)
Updated Date: Tue, 08 Jun 2021 (22:13 IST)
அனைத்து அரசு நூலகங்களிலும் முரசொலி தினகரன் குங்குமம் உள்ளிட்ட நாளிதழ்களை வாங்க வேண்டும் என தமிழக அரசு மறைமுகமாக உத்தரவிட்டு இருப்பது குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நாளிதழ்களுக்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கும் அனைத்து ஆங்கில, தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்!
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது!