Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள்...தினகரன் டுவீட்... மு.க ஸ்டாலின் அதிரடி .....

தி.மு.க.வினர்  திருந்தவே மாட்டார்கள்...தினகரன் டுவீட்... மு.க ஸ்டாலின் அதிரடி .....
, செவ்வாய், 4 மே 2021 (15:59 IST)
சென்னை ஜே ஜே நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று காலை மூவர் அங்கிருந்த பேனர்களை கிழித்ததுடன், அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்..எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல், அமமுக பொதுச்செயலாளர்  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரகளை செய்தவர்களை கட்சியிலிருந்து நீக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகத்தில் சேதப்படுத்தப்பட்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டதுடன், ரகளை செய்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா உணவகத்தை தாக்கிய விவகாரம்; இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!