Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் ஹீரோவுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு

சென்னையின் ஹீரோவுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (22:00 IST)
சென்னையில் ஐந்து ரூபாய் மட்டுமே பெற்று கொண்டு சிகிச்சை  அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் நேற்று காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியபோது, ' டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு ஹீரோ என்றும், கடந்த 40 ஆண்டுகளாக ஏழை - எளிய மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றும், குறைந்த விலையில் மருத்துவ சேவை ஆற்றியவர் என்றும்  பதிவு செய்துள்ளார்.

webdunia
அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியபோது, 'விவசாய குடும்பத்தில் பிறந்து, ஏழை
 
- எளிய மக்களுக்கு, கடந்த 40 ஆண்டுகளாக குறைந்த செலவில், மருத்துவ சேவை ஆற்றிய டாக்டர் ஜெயச்சந்திரன், தன்னலம் கருதாமல் பணியாற்றியதாக புகழாரம் சூட்டி உள்ளார்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லிம்களின் ஆண்மையை குறைக்க ஊசி? வைரலாகும் வாட்ஸ் ஆப் வதந்தி