பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (16:28 IST)
பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணியாற்றி வருகின்றன.
 
தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. எனவே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக மீது பல விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வரும் நிலையில், பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:
 
தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக ஐடி பிரிவினர் எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். சமூக வலைதளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது. அதிமுகவின் சாதனைகளையும், திமுக அரசு செய்த தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்ப், கூகுள், மைக்ரோசாப்ட், டாடா பெயர்களில் சாலைகள்.. முதல்வர் அதிரடி முடிவு..!

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments