Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது -வைகோ

Advertiesment
தமிழ்நாட்டு மக்களுக்கு  பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது  -வைகோ
, திங்கள், 1 ஜனவரி 2024 (14:17 IST)
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும்  பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ  சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்குப்        பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:  ''முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் சந்திப்புக்குப் பின்னராவது ஆளுனர் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும்'' என்று கூறினார்.
 
மேலும், ''பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ் நாட்டை அறிவிக்க வேண்டும். புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ் நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாச கட்டணம் - திரும்ப வழங்க உத்தரவு- அமைச்சர் சிவசங்கர்