Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதிப் பேரணி...

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:26 IST)
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடந்த 199, 1971, 1989, 1999, 2006 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவி வகித்தவர் கலைஞர் மு. கருணாநிதி. இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், கருணா நிதியின் 5 வது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட்  7 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓமந்தூரில் உள்ள கலைஞரின் சிலையில் இருந்து  நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடக்கவுள்ளது.

இதில், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிவாகிகள், தொண்டர்கள் பங்கேற்க கட்சித்தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments