Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

Advertiesment
ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
 
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்.ஸிடம், "திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த அவர், "இன்றைய சூழலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பிளவுபட்டுள்ளன. அ.தி.மு.க. பிளவுபட்டுள்ளது; பா.ம.க.விலும் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கும்போது, ஆளும்கட்சியான தி.மு.க.வுக்கு தானே வெற்றி வாய்ப்பு இருக்கும்? அது கண் கூடாகவே தெரிகிறது" என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
 
மேலும், "வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அது ஏன், எப்படி என்று விவாதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ள காரணத்தால் தான் தி.மு.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் இதை சொல்லவில்லை" என்று குறிப்பிட்டார்.
 
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறைவு காரணமாகவே, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுவதையே தனது பேட்டியில் ஓ.பி.எஸ். சுட்டிக்காட்டினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!