Publish Date: Tue, 22 Feb 2022 (10:04 IST)
Updated Date: Tue, 22 Feb 2022 (10:06 IST)
உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வால்பாறை, கீரமங்கள் பகுதிகளில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலும் பெருவாரியான வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது. இதுதவிர விஜய் மக்கள் இயக்கம், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.