Publish Date: Tue, 22 Feb 2022 (09:49 IST)
Updated Date: Tue, 22 Feb 2022 (09:52 IST)
திமுக தொண்டரை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக அதிமுகவினர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறு தேர்தல் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வாக்குச்சாவடி அருகே திமுக தொண்டருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனால் திமுக தொண்டரை தாக்கிய ஜெயக்குமார் அவரை சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து ஜெயக்குமார் கைதுக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினர் ட்விட்டரில் #WeStandWithJayakumar என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.