Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயை விட்டு மாட்டிக்கொண்ட எச்.ராஜா: மண்டை மேல உள்ள கொண்டைய மறந்துட்டோமே!

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (12:36 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல் ஒன்றை கூற, அவர் தீக்குளிப்பாரா என திமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு டுவிட்டரில் சவால் விட்டுள்ளார்.
 
சென்னை 41-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தமிழன் பிரசன்னா எழுதிய இவன் கருப்பு சிவப்புக்காரன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர் புனித நூல்களை குப்பை என பேசியதால் விரட்டப்பட்டார் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் பாஜகவின் எச்.ராஜா. நடப்பது 41-வது புத்தக கண்காட்சி, ஆனால் எச்.ராஜா 10-வது புத்தக கண்காட்சி என கூறியிருந்தார்.

 
இதனையடுத்து எச்.ராஜாவுக்கு தனது டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார் திமுகவின் தமிழன் பிரசன்னா. அதில், எச்.ராஜாவுக்கு சவால் என கூறி, நான் புனித நூல்களை குப்பை என்று பேசியதையும், நீங்கள் குறிப்பிட்டு உள்ளபடி ஏதேனும் நிகழ்வு நடந்ததாக நிருபித்தால் நான் தீக்குளிக்க தயார், இல்லை என்றால் எச்.ராஜா தீக்குளிப்பாரா? என கேள்வி எழுப்பிய அவர் அடைப்புக்குள் நடப்பது 41-வது புத்தகக்கண்காட்சி என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments