Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழி கல்வி கற்க எங்களுக்கு உரிமை தாருங்கள்.. முதல்வருக்கு அரசு பள்ளி மாணவிகள் கோரிக்கை..!

Siva
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (15:21 IST)
மத்திய அரசின் மும்மொழி கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகளை மாணவர்கள் கட்டாயமாகக் கற்கின்ற நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் மூன்று மொழிகளை கற்க உரிமை வழங்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை தெரிவிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்மொழிக் கொள்கை என்பது தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது மொழியை கற்பது மட்டுமே என்று மாணவிகள் கூறியுள்ளனர். ஹிந்தி கட்டாயம் இல்லை என்றும், தாங்கள் விருப்பப் பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில், "தமிழக முதல்வர் அவர்களே, அரசு பள்ளியில் எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்க அனுமதி வழங்குங்கள்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Edited by Siva 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

121 பேர் பலியான ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: போலே பாபா குற்றமற்றவர் என அறிவிப்பு..!

GET OUT MODI.. 2019ஆம் ஆண்டின் பதிவுக்கு குஷ்பு விளக்கம்..!

சரியில்லாத மாவட்ட செயலாளர்கள் நீக்கம்? ஆதவ் அர்ஜுனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த விஜய்..!

16 வயது சிறுமிக்கு திருமண முயற்சி.. 1098 எண்ணுக்கு போன் செய்த சிறுமி..!

போப் இறுதி சடங்கு ஒத்திகை பார்க்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments