Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் 370-ஐ நீக்கியது தவறு அல்ல: முக ஸ்டாலின் திடீர் பல்டி!

காஷ்மீரில்  370-ஐ நீக்கியது தவறு அல்ல: முக ஸ்டாலின் திடீர் பல்டி!
, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (20:40 IST)
மத்திய அரசு சமீபத்தில் காஷ்மீரில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்கியது. இதனை அடுத்து அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை திமுக மற்றும் பாகிஸ்தான் தவிர வேறு எந்த பெரிய கட்சியும் நாடுகளும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியில் இந்த சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஒரு சில எம்பிக்கள் மட்டுமே கலந்து கொண்டதால் போராட்டம் பிசுபிசுத்ததாக கூறப்படுகிறது 
 
 
இந்த நிலையில் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும், கையாண்ட விதம்தான் தவறு என்றும், முறையாக இந்த சட்ட நீக்கம் அமல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவே போராடினோம் என்றும் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். 
மேலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார் 
 
 
காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு ஆரம்பம் முதல் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது திடீரென இந்த சட்டத்தை நீக்கியதற்கு போராடவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி, திடீர் பல்டி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயில் சுவர் இடிந்து மக்கள் உயிரிழப்பு.. பலர் படுகாயம்