Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவினரின் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது- வானதி சீனிவாசன்

திமுகவினரின்  போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது- வானதி சீனிவாசன்

Sinoj

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:04 IST)
திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில்  வேலை செய்து வந்த ரேகா என்ற  இளம்பெண்ணை,  ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்திய நிலையில், SC. ST  வன்கொடுமை  சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில்  வேலை செய்து வந்த ரேகா என்ற  இளம்பெண்ணை,  ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீஸார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீலாங்கரை மகளிர் போலீஸார் SC. ST  வன்கொடுமை  சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நியையில்,  எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை  கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:

‘’திமுக ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற் போல் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தனது வீட்டில் வேலை செய்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை சிகரெட்டால் சூடு வைத்தும் அடித்தும் கொடுமைபடுத்திய செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

மேலும் தனது படிப்பிற்காக வேலை செய்த பெண்ணிற்கு ஊதியமும் சரியாக வழங்கப்படவில்லை. தமிழக காவல்துறை விரைவாக விசாரணை மேற்கொண்டு , குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.கவினரின் வீட்டில் வேலை செய்யும் பட்டியலின சமூகத்தினருக்கே பாதுகாப்பு இல்லை. பட்டியல் சமூகத்தினரின் உண்மையான பாதுகாவலர்கள் திமுகவினர் தான் எனும் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!