Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!
, புதன், 21 பிப்ரவரி 2018 (14:00 IST)
திருச்சியில் திமுகவினர் அளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

 
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று திருச்சி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த, ஆளுநர் ஆய்வு பணிகள் மேற்கொள்வது, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரானது, ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரை ஆய்வு செய்ய விட்டிருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகளவில் 17வது இடத்தை பிடித்த ஜியோ; எதில் தெரியுமா?