Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு!

மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:41 IST)
தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.

 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்து விட்டார்.
 
இதையடுத்து திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்ட்டு, அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் விவாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டபடி,திமுக எம்.பிக்கள் வெளி நடப்பு செய்தனர். தமிழ்நாடு எம்.பிக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் வெளி நடப்பு செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தர பிரதேச தேர்தலில் அயோத்தி விவகாரம் தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துமா?