ஒரு பிடி மண்ணு கூட இங்கு இருந்து எடுத்துட்டு போக முடியாது: கவர்னர் குறித்து திமுக எம்பி டுவிட்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (11:54 IST)
நேற்று சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆகி வரும் நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ‘இது எங்க கோட்டை, ஒரு பிடி மண்ணு கூட இங்கிருந்து எடுத்துட்டு போக முடியாது, வெளியே போ என்று கூறும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மூலம் அவர் நேற்றைய கவர்னர் நிகழ்ச்சியை மறைமுகமாக கூறியுள்ளார் என்பது தெரிய வருகிறது. 
 
மேலும் இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய சட்டசபை நிகழ்வின்போது கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறும் போது ’வெளியே போ’ என அமைச்சர்கள் உள்பட திமுக எம்பிக்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments