திமுக எம்.பி., கனிமொழி வீடு திரும்பினார் …

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (15:59 IST)
சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி இன்று வீட்டுக்குத் திரும்பினார்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.
 
இந்நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி தொகுதி எம்பியும், திமுக நிர்வாகியுமான கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பாஜக வேட்பாளர் குஷ்பு கனிமொழி குணமடைய வேண்டுமென டுவீட் பதிவிட்டார்.
 
நேற்று மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக கொரோனா பாதுகாப்பு உடையான பிபிசி கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். இப்புகைப்படம் வைரலானது. 
 
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி கனிமொழி இன்று வீடு திரும்பினார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

கோவையில் இன்னொரு சம்பவம்.. இளம்பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments