Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி., கனிமொழி வீடு திரும்பினார் …

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (15:59 IST)
சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி இன்று வீட்டுக்குத் திரும்பினார்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.
 
இந்நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி தொகுதி எம்பியும், திமுக நிர்வாகியுமான கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பாஜக வேட்பாளர் குஷ்பு கனிமொழி குணமடைய வேண்டுமென டுவீட் பதிவிட்டார்.
 
நேற்று மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக கொரோனா பாதுகாப்பு உடையான பிபிசி கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். இப்புகைப்படம் வைரலானது. 
 
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி கனிமொழி இன்று வீடு திரும்பினார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments