Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழிவாங்குவதற்காக ரெய்டு... ஈபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் பதிலடி!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (11:43 IST)
அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கும், காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் தொடர்பில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி. 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். இதை விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கும், காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் தொடர்பில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் யாரையும் பழிவாங்குவதற்காக ரெய்டு நடத்தப்படவில்லை. அந்த எண்ணமும் முதல்வருக்கு கிடையாது. சட்டப்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments