Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாவட்டங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அலர்ட்! – காத்திருக்குது கனமழை!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (11:36 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் நாளை கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கடலுண்டி, கல்லடா, மணிமலை, மீனச்சில் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவின் பெரும்பதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளா மாவட்டங்களில், முக்கியமாக வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments