Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாவட்டங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அலர்ட்! – காத்திருக்குது கனமழை!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (11:36 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் நாளை கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கடலுண்டி, கல்லடா, மணிமலை, மீனச்சில் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவின் பெரும்பதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளா மாவட்டங்களில், முக்கியமாக வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments