Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெய்டுக்கு எதிர்ப்பு - அதிமுகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

ரெய்டுக்கு எதிர்ப்பு - அதிமுகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
, வெள்ளி, 8 ஜூலை 2022 (09:03 IST)
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுகவினர் போராட்டம். 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 
 
சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றத்தை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னி வீரர்களாக சேர வந்து குவிந்த விண்ணப்பங்கள்... அடுத்து என்ன??