Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்., 14 முதல் விருப்ப மனு - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்., 14 முதல் விருப்ப மனு - திமுக தலைவர் ஸ்டாலின்
, திங்கள், 11 நவம்பர் 2019 (14:17 IST)
தமிழகத்தில் கூடிய விரையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் போட்டியிட  வரும் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,இன்று,  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மு. க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 14 ஆம் தேதிமுதல் 20 ஆம் தேதிவரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என கூறினார்.
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போடியிட விரும்புவோர், நவம்பர் 15,, 16 ஆகிய தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில்  விருப்ப மனு பெறலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிமுக மாவட்ட தலைமையகத்தில் அளிக்கலாம்  என அதிமுக தலைமை நேற்று, அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தத்துப்பிள்ளையை கைவிட்ட பெற்றோர் – நண்பர்கள் உதவி